கம்பஹா மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் மந்தம்!


கம்பஹா மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸுக்கு எதிரான அஸ்ட்ரா செனகா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள பங்கேற்பது மிகக் குறைவு என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

கொரோனா தடுப்பூசி நடவடிக்கையின் முன்னேற்றத்தை மறுஆய்வு செய்வதற்காக கம்பஹா மாவட்டத்திற்குச் சென்ற நிலையில், மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

மாவட்டத்தில் இதுவரை 2 இலட்சத்து 49 ஆயிரத்து 223 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

எனினும் இதில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் 40வீதம் மட்டுமே அடங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.