மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மீனவர்கள் விடுவிப்பு!


மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 12 இலங்கை மீனவர்களை, மியன்மார் நீதிமன்றம் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து விடுவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை மியன்மாருக்கான இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து மியான்மர் அரசாங்கத்திடம் இருந்து நாடு திரும்புவதற்கான உத்தியோகபூர்வ நாடுகடத்தல் உத்தரவை எதிர்பார்த்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட உள்ளதாக அந்நாட்டுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மீனவர்களுக்கு மன்னிப்பு வழங்குமாறு இலங்கை அரசு மியான்மர் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.