கோட்டாபய அரசில் பாரிய குழப்பம்!


ஊழல் அதிகாரிகளுடன் பணியாற்ற முடியாதென தெரிவித்து தேசிய வீடமைப்பு அதிகார சபை தலைவர் ரேனுக பெரேரா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். துறைசார் அமைச்சர் அழுத்தங்களை பிரயோகித்ததால் இந்த தீர்மானத்தை தாம் மேற்கொண்டதாக ரேனுக பெரேராவினால் பிரதமருக்கு அனுப்பப்பட்டுள்ள இராஜினாமா கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பதில் பொது முகாமையாளர் பதவிக்கு கணக்காய்வின் போது குற்றவாளியாகக் காணப்பட்ட ஒருவரை நியமிக்குமாறு தொடர்ச்சியாக விடுக்கப்பட்ட அழுத்தங்களின் போது தாம் அதற்கு இணங்கவில்லை என ரேனுக பெரேரா கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பிரதமர் மற்றும் செயலாளருக்கு அறிவித்ததாகவும் அவரது இராஜினாமா கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகளுடன் பணியாற்ற முடியாது என தெரிவித்து தாம் இராஜினாமா செய்ததாகவும் ரேனுக தெரிவித்துள்ளார்.

இந்த இராஜினாமா கடிதத்தின் பிரதிகள் ஜனாதிபதி, ஜனாதிபதியின் செயலாளர், அமைச்சின் செயலாளர் மற்றும் பசில் ராஜபக்ஸ ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அண்மைக் காலமாக இவ் அரசில் பாரிய குழப்பம் நீடித்த வரும் நிலையில் பல அரசில் ரீதியில் பாரிய நெருக்கடிகள் அதிகரித்து கட்சிகளிடையில் பிளவு அதிகரித்துள்ளமை குறிப்பிடத் தக்கது. 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.