அரச வைபவங்களை இரண்டு வாரங்களுக்கு நடத்த தடை!


அடுத்த இரண்டு வாரங்களுக்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சகல அரச வைபவங்களும் இன்று நடைமுறைக்கு வரும் வகையில் தடைசெய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அத்துடன் அடுத்த இரண்டு வாரங்களுக்கு நடத்த திட்டமிட்டிருந்த தனியார் வைபவங்கள் மற்றும் விருந்துகள் என்பவற்றை தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழு் தடை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

கோவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே சுகாதார துறையினர் வழங்கும் ஆலோசனைகளை சில பொதுமக்கள் பின்பற்றாத நிலைமை காணப்படுவதாக கோவிட் 19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரான இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

சிலர் சுகாதார ஆலோசனைகளை கவனத்தில் கொள்ளாது வினோத சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்வதாகவும் இவற்றை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பெருமளவில் மக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும் இராணுவ தளபதி பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.