தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கை அறிவித்தது தமிழக அரசு!


தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவிவரும் நிலையில் இரவுநேர ஊரடங்கை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் 20ஆம் திகதியில் இருந்து இரவு 10 மணிமுதல் அதிகாலை நான்கு மணிவரை ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு உத்தரவு மறு அறிவிப்புவரை தொடரும் எனவும் இதன்போது, தனியார் பொதுப்போக்குவரத்துகளுக்கு அனுமதி இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மருத்துவம் போன்ற அவசர தேவைக்கான தனியார் போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுவதுடன் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறந்திருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளதுடன் பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.