50 லட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் மீட்பு!


யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் கடந்த சில மாதங்களாக களவாடப்பட்ட சுமார் 50 லட்சம் ரூபா பெறுமதியான பல உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சந்தேக நபர்களை நாளையதினம் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

அத்துடன் நிறுவனம், கடை, தேவாலயம் மற்றும் வீடு உள்ளடங்கலாக 7 இடங்களில் கொள்ளையிடப்பட்ட உபகரணங்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் , யாழ் பொலிஸ் நிலைய குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினரே குறித்த உபகரணங்களை மீட்டு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.