யாழில் மோதல் சம்பவம்!
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை - அல்வாய் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அல்வாய் பகுதியில் நேற்று முன்தினம் இரண்டு குழுவினர் இடையே இடம்பெற்றிருந்த இந்த மோதலில் 31 வயதுடைய ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் 4 பேர் காயமடைந்தனர்.
உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றிருந்ததாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் காவல்துறையினர் முன்னெடுத்த விசாரணைகளுக்கு அமைய இரு குழுக்களுடன் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் தொடர்ந்தும் தேடப்பட்டு வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை