கிளிநொச்சி பாதுகாப்பாக உள்ளது!


கொரோனா பாதிப்பிலிருந்து தற்போது வரை கிளிநொச்சி மாவட்டம் பாதுகாப்பாகவே உள்ளதாக கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மக்கள் அனைவரும் இந்த நிலைமையைத் தொடர்ந்தும் பேணுவதற்கு, சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனைகளைப் பின்பற்றி நடந்து கொள்ள வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனை தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் எழுமாறாக மேற்கொள்ளப்படுகின்ற பிசிஆர் பரிசோதனைகளில் இருந்து கிடைக்கப்பெற்ற முடிவுகளின் படி, கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த எவருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் வெளிமாட்டங்களில் இருந்து வருகின்றவர்களுக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்நிலையில் தற்பொழுதுவரை , கிளிநொச்சி மாவட்டம் ஓரளவுக்கு பாதுகாப்பாகவே உள்ளதாகவும், ரூபவதி கேதீஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.