14 நாட்களுக்கு கலால் திணைக்களத்திற்கு பூட்டு!


கொரோனா தொற்று காரணமாக கலால் திணைக்களத்தின் நிர்வாகப்பிரிவை 14 நாட்கள் மூடிவைக்குமாறு சுகாதார பிரிவு வழங்கிய ஆலோசனைக்கமைய அதனை மூடி வைத்துள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள கலால் திணைக்களம், இராஜகிரியவில் அமைந்துள்ள கலால் திணைக்களத்தின் தலைமையகத்தில் பணிபுரிந்துவரும் ஊழியர்கள் சிலருக்கு தொற்று ஏற்பட்டமையினால், அந்த நிறுவன ஊழியர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தி வைக்குமாறு சுகாதார பிரிவு ஆலோசனை வழங்கியிருந்தது.

இதன்படி கலால் திணைக்களத்தின் சுற்றிவளைப்பு பிரிவு எதிர்வரும் 14 நாட்கள் வரை மூடிவைக்கப்படவுள்ளது. இதன்போது மதுபானம்,போதைப்பொருள் மற்றும் புகையிலை குற்றச் செயற்பாடுகள் தொடர்பில் 1913 என்று இலக்கத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் குறித்த தொலைபேசி இலக்கம் எதிர்வரும் 23 ஆம் திகதி வரையிலும் செயற்பாட்டில் இருக்கும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.