காதலன் மரணத்தை தாங்க முடியாத யுவதியும் மரணம்!


சுகயீனம் காரணமாக காதலன் உயிரிழந்ததை தாங்க முடியாத காதலி தானும் உயிரை மாய்த்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

யாழ் மாவட்டம் இருபாலை மடத்தடி பகுதியினை சேர்ந்த இராசேந்திரம் இனிசா (வயது-21) என்ற யுவதியே உயிரிழந்தவர் ஆவார்.

காதலித்து வந்த இளைஞன் நோய்வாய்ப்பட்டு கடந்த வாரம் உயிரிழந் தார் இதனால் மனமுடைந்த நிலையில் கடந்த சில நாட்களாக யுவதி இருந்துள்ளார்.

இந்நிலையில் யுவதி இன்று தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறான தவறான முடிவுகள் சமுதாயத்தில் தவறான முன்னுதாரணகளாக என்றுமே அமையக்கூடாது என சமுக ஆர்வலர்கள் பலரும் கூறிவருகின்றனர்..

இதேவேளை இளைஞர், யுவதிகள் உங்களிலே யாருக்காவது இவாறான மனக் கஷ்ரம் ஏற்படுமாயின் உங்களுக்கு நெருக்கமானவர்களோடு மனம் விட்டு பேசுங்கள்.

உங்களின் நலனில் அக்கறையுள்ள பெற்றோரை, நண்பர்களை நாடுங்கள். இவ்வாறான முடிவுகள் எந்த ஒரு நன்மையையும் சமுதாயத்திற்கு வழக்கப்போவதில்லை எனவும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.