வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் மணிவண்ணன்!


யாழ். மாநகர முதல்வர், சட்டத்தரணி வி. மணிவண்ணன் சட்டவைத்திய பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

யாழ். மாநகர சபையினால் உருவாக்கப்பட்ட காவல்படை தொடர்பாக மாநகரசபை முதல்வரும், சட்டத் தரணியுமான மணிவண்ணன் பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவினரால் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், அவர் வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.

இதையடுத்து. இன்று மதியம் சட்ட வைத்திய பரிசோதனைக்காக வவுனியா போது வைத்தியசாலைக்கு அவர் அழைத்துச்செல்லப்பட்டார்.

அத்துடன், பரிசோதனைகளின் பின்னர் கண்டி விதீயில் அமைந்துள்ள பயங்கரவாரதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவிற்கு மீண்டும் மணிவண்ணன் அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.