மன்னாரிற்கு கடத்தப்பட்ட மஞ்சள் மூடைகள்!
யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாரிற்கு கடத்தி செல்லப்பட்ட 1989 கிலோ கிராம் மஞ்சள் கட்டி மூடைகளுடன் ஐந்து பேர் இன்று மூன்றாம் பிட்டி பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாரிற்கு மஞ்சள் கட்டி மூட்டைகள் கடத்தப்படுவதாக இலுப்பைக்கடவை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் மஞ்சள் கட்டி மூட்டைகளை பொலிஸார் கைப்பற்றியதுடன் சந்தேகநபர்களையும் கைதுசெய்தனர்.
கைதானவர்கள் மன்னாரை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட மஞ்சள் கட்டி மூட்டைகள்,மற்றும் வாகனம் என்பன இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதோடு, கைது செய்யப்பட்ட குறித்த 5 நபர்களும் இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் மீட்கப்பட்ட மஞ்சள் கட்டி மூட்டைகள் மற்றும் வாகனம் என்பன மன்னார் நீதிமன்றத்தில் ஓப்படைக்கப்பட உள்ளதுடன் சந்தேக நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை