அமைச்சர் பத்தாயிரம் வீடுகளை அகற்ற அதிரடி நடவடிக்கை!


நாடளாவிய ரீதியில் அபாய வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள வீடுகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.

இதன்படி, குறித்த பகுதிகளில் உள்ள 10 ஆயிரம் வீடுகளை இவ்வாறு அகற்ற திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் சமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மேலும், தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தால் அபாய வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள வீடுகள் இவ்வாறு அகற்றப்படவுள்ளன.

இதேவேளை, இவ்வாறு அகற்றப்படும் வீடுகளுக்கு பதிலான மாற்று நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்க்பட்டுள்ளது.

அத்துடன், மாற்று நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது பெருந்தோட்ட பகுதிகளில் காணிகளை பெறுவதில் சில சிக்கல்கள் காணப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், சிக்கல்களை நிவர்த்தி செய்து, வீடுகளை நிர்மாணிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சமல் ராஜபக்ஸ இதன்போது கூறியுள்ளார்.

சில பகுதிகளில் வீடுகளை நிர்மாணிப்பதற்கு தேவையான காணிகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சமல் ராஜபக்ஸ பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.