மீண்டும் தலைவராக ‘ஸ்டீவன் ஸ்மித்’


 மீண்டும் தலைவராக மாற விரும்புகிறேன் என ஸ்டீவன் ஸ்மித் கூறியது குறித்து ஜஸ்டீன் லெங்கர் பேசியுள்ளார்.

சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவுஸ்திரேலியா வீரர் ஸ்டீவன் ஸ்மித், தான் மீண்டும் தலைவராக மாற விரும்புகிறேன். அவுஸ்திரேலியா அணி நிர்வாகம் வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் சிறப்பாக செயல்படுவேன் எனத் தெரிவித்திருந்தார்.

இது அவுஸ்திரேலியா கிரிக்கெட் உலகில் புயலைக் கிளப்பியது. இந்நிலையில் தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள ஆஸி அணி பயிற்சியாளர்

ஜஸ்டீன் லெங்கர், அணியில் இரண்டு (டிம் பெய்ன், ஆரோன் பிஞ்ச்) திறைமையான தலைவராக இருக்கிறார்கள். அடுத்தடுத்து ஆஷஸ், டி20 உலகக் கிண்ணம் போன்ற தொடர்கள் நடைபெறவுள்ளது. அணியில் தற்போதைக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. தற்போதைக்கு தலைமையில் இடங்களில் பற்றாக்குறை இல்லை” எனத் தெரிவித்தார்.

ஊடகங்களை சந்தித்த ஸ்டீவன் ஸ்மித், தான் மீண்டும் தலைவராக செயல்பட விரும்புகிறேன் என்றார். “மீண்டும் தலைவராக மாறுவது குறித்து பல நாட்களாக யோசனையில் இருந்தேன். அணி நிர்வாகம் மீண்டும் தலைமை பொறுப்பு கொடுத்தால் நிச்சயம் சிறப்பாக செயல்படுவேன். இதை என்னால் உறுதியாக கூட முடியும்” எனக் கூறியிருந்தார்.

மேலும் பேசிய அவர், “டெஸ்ட் அணி தலைவர் டிம் பெய்ட், டி20, ஒருநாள் அணித் தலைவர் ஆரோன் பிஞ்ச் இருவரும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார்கள். நான் தலைவனாக மாற விரும்புகிறேன் என்பதற்காக இருவரையும் குறைகூற விரும்பவில்லை. இருவருக்கும் எனது ஆதரவு எப்போதும் உண்டு. அணி நிர்வாகம் எனக்கு வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் சிறப்பாக செயல்படுவேன் அவ்வளவுதான்” என்றார்.

2018ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியில், அப்போது அவுஸ்திரேலியா அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் பந்தை சேதப்படுத்திய முறைப்பாட்டில் சிக்கினார். இதனால், இரண்டு வருடம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது. மேலும் ஒரு வருடம் தலைவனாக செயல்பட முடியாத அளவிற்கும் தண்டனை கொடுத்தது. தற்போது தண்டனை காலம் அனைத்தும் முடிந்துள்ளமையும் குயப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.