பாடசாலைக்கு சென்ற 15 வயது சிறுமி மாயம்!


திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் பிரதேசத்தில் 9ஆம் தரத்தில் கல்விகற்கும் 15 வயது சிறுமி ஒருவர் நேற்று பாடசாலைக்கு சென்றிருந்த நிலையில் வீடுதிரும்பவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவதினமான நேற்று வீட்டில் இருந்து பாடசாலைக்கு சென்று பாடசாலை முடிவடைந்து வீடு திரும்பாததையடுத்து உறவினர்கள் பொலிசாருக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த சிறுமி பாடசாலைய முடிவடையும்வரை பாடசாலையில் இருந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. அதன் பின்னர் பாடசாலை முடிவடைந்த பின்னர் பாடசாலையைவிட்டு வெளியேறியுள்ளதாகவும் பாடசாலைக்கு செல்லும்போது பாடசாலை பையில் உடைகள் எடுத்துச் சென்றுள்ளதோடு 50 ரூபா பணம் தாயிடம் பெற்றுச் சென்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் சிறுமி மாயமான சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.