புத்தாண்டை முன்னிட்டு மேலதிக போக்குவரத்து சேவை!


புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக மேலதிக பேருந்து மற்றும் ரயில்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

அந்த வகையில்,இன்று (வெள்ளிக்கிழமை) முதல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை இந்த விசேட ரயில் மற்றும் பேருந்துகள் சேவைகள் இடம்பெறும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

வழமையாக பயணிக்கும் எண்ணிக்கையை விட மேலதிகமாக ஆயிரத்து 192 அரச பேருந்துகளும் 21 ரயில்களும் சேவையில் ஈடுபடுகின்றன. மேலதிக ரயில்கள் 57 பயண சேவைகளில் ஈடுபடுகின்றன.

இதுதவிர ஆயிரத்து 800 தனியார் பேருந்துகளும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

மக்களுக்கு உயர்ந்தபட்ச சேவையை வழங்கும் வகையில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலை கருத்திற்கொண்டு பேருந்துகளின் ஆசன எண்ணிக்கைக்கு மாத்திரம் பயணிகள் பயணிக்க வேண்டும். மோட்டார் வாகன பிரதி பொலிஸ் மா அதிபர் இதனை அவசியம் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.