நயினாதீவில் வெசாக் நிகழ்வை நடத்துவதற்கான ஏற்பாடுகள்!


கொரோனா அபாய நிலைக்கு மத்தியிலும் தேசிய வெசாக் நிகழ்வை நயினாதீவில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இம்முறை தேசிய வெசாக் தினத்தை யாழ்ப்பாணம் - நயினாதீவில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாட்டுப் பணிகள் அங்கு விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றன.

வீதிகளை செப்பனிடுவதற்காக கனரக வாகனங்கள் மூலம் மணல்கள் என்பன கடல் வழியாக மிதக்கும் பாதையூடாக கொண்டு செல்லப்படுகிறது.

வெசாக் தின நிகழ்வுகளுக்கு தென்னிலங்கையில் இருந்து அதிகமானவர்கள் வருவதற்கான ஏற்பாடுகள் இடம் பெற்றுவரும் இதனால் கொரோனா தொற்று அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

அண்மையில் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயிலில் இடம்பெற்ற தேர் உற்சவத்தில் கோவிட் வழிகாட்டல்களை மீறி அதிகளவிலான மக்கள் பங்கேற்ற நிலையில் ஆலய தலைவர் மற்றும் செயலாளர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.