வாகனம் செலுத்துவோரிற்கு விசேட அறிவிப்பு!


மதுபோதையில் வாகனம் செலுத்தியமைக்காக கடந்த 13 முதல் இன்று காலை 6.00 மணிவரையான காலப் பகுதியில் 1,834 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைதுசெய்வதற்கான சிறப்பு நடவடிக்கை இன்று நண்பகல் முதல் நாளை காலை 6 மணிவரை செயல்படுத்தப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் தலைமையகத்தின் ஆலோசனையின் பேரில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, நெடுஞ்சாலைகளின் நுழைவாயில்கள் மற்றும் வெளியேறும் இடங்களில் செயல்படுத்தப்படும் என்ரும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை மது போதையுடன் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை சட்டத்தின் பிடியில் சிக்க வைக்கும் விசேட தேடுதல் நடவடிக்கை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேலும் மது போதையில் வாகனத்தை செலுத்துவோருக்கு பிணை வழங்கப்படாது அவர்கள் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனவும் அவர் கூறினார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.