சைக்கிளில் வந்து வாக்களித்த தளபதி விஜய்!


தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் சென்னையில் உள்ள திரையுலக பிரபலங்கள் தங்களது வாக்கு சாவடிகளில் வாக்குகளை பதிவு செய்தார்கள்.

இந்த நிலையில் நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு சற்றுமுன் தளபதி விஜய் சைக்கிளில் வந்தார். அவருடன் அவருடைய ரசிகர்களும் ஏராளமானோர் வந்தனர்.

வாக்குச்சாவடிக்கு வந்த விஜய்யுடன் புகைப்படம் எடுக்க ரசிகர்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து அங்கு பாதுகாப்புக்கு இருந்த பொலிஸார் விஜய்யை பாதுகாப்பாக அழைத்துச் சென்று வாக்களிக்க செய்தனர்.

விஜய் வாக்களித்த பின் தான் வந்த சைக்கிளில் திரும்பி வீட்டுக்கு சென்றார்.

அதேசமயம் நடிகர் சிவகுமார், மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோரும் காலையிலேயே சென்று தமது வாக்குகளை பதிவுசெய்துள்ளனர்.

இதேவேளை இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தொற்று பரவாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகள் வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். கோடை வெயில் வாட்டி வதைக்கு என்பதால், மக்கள் அதிகாலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.