யாழ். இளைஞர்களின் செயற்பாட்டால் இராணுவம் மகிழ்ச்சி!!

 


குறைந்தது 1,600 தமிழ் இளைஞர்கள் மூன்று மாத காலத்திற்குள் இலங்கை இராணுவத்தில் சேர்ந்துள்ளனர் என்றும் இவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


யாழ்ப்பாணத் தலைமையகத்தில் பாதுகாப்புப் படை அதிகாரிகள் மத்தியில் உரையாற்றும் போது அவர் இதை தெரிவித்தார். பிரிவினைவாதத்திற்கு ஆதரவாக மக்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதை நாங்கள் இன்னும் காண்கிறோம்.


இத்தகைய சூழ்நிலையில், தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் சேர முன்வந்திருப்பது மிகப்பெரிய வெற்றியாகும்.


பொது மக்களுக்குத்  தேவையான தனிமைப்படுத்தல் வசதிகளை வழங்குவதில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இராணுவம் மற்றும் விமானப்படை வீரர்கள் செய்த சேவையை இராணுவத் தளபதி பாராட்டினார்.  


அத்துடன் யாழ் இளைஞர்களின் இந்த முயற்சியானது இராணுவத்திற்கு பெரு மகிழ்ச்சி என மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.