முல்லைத்தீவில் கைது செய்யப்பட்டவருக்கு கொரோனா!


முல்லைத்தீவில் பிடியாணை உத்தரவுடன் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான், சின்னச்சாளம்பன் பகுதியைச் சேர்ந்தவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதியானது.

சந்தேகநபர் , கடந்த 19ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டு 20ஆம் திகதியன்று பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த அறிக்கை, 23ஆம் திகதியன்று வெளியானபோது அவருக்கு தொற்றியிருப்பது உறுதியானது. இதனையடுத்து சந்தேகநபரை கைது செய்த பொலிஸார், பொலிஸாருடன் தொடர்புடையவர், நீதிமன்ற வளாகத்தில் இரு தரப்பினருடன் தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதேவேளை முல்லைத்தீவு , ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸாருக்கு இன்று பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.