காணாமல் போன மகனைத் தேடியக் மற்றுமொரு தந்தை உயிரிழப்பு
வவுனியாவில் காணாமல் போன தனது மகனைத் தேடி அலைந்த தந்தை ஒருவர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா தாலிக்குளம் பகுதியை சேர்ந்த சந்தணம் ராகவன் வயது 65 என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவரது மகன் ராஜ்குமார் கடந்த 2008 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டிருந்தார் .
இந்நிலையில் அவரைத்தேடி வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களில் குறித்த தந்தை கலந்து கொண்டு தனது மகனை மீட்பதற்காக தொடர்ச்சியாக போராடியிருந்தார்.
இவ்வாறான நிலையில் மகனை காணாமலேயே அவர் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை