அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!


அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ வௌியேற்றம் நாளை காலை 6 மணி முதல் மீள அறிவிக்கும் வரையில் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த காலப்பகுதியில் அம்புலன்ஸ் மற்றும் பேருந்துகளுக்கு குறித்த வௌியேற்றத்தை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

வீதி அபிவிருத்தி சபை அதிகாரிகள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்துபவர்கள் அத்துருகிரிய மற்றும் கஹதுடுவ வௌியேற்றத்தை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. 

கொட்டாவ ஊடாக வாகனங்கள் உள்நுழைய முடியும் எனவும் குறித்த பகுதியில் கட்டணம் அறவிடப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.