கொரிய தூதுவருக்கும் அமைச்சர் பவித்ராவுக்குமிடையில் கலந்துரையாடல்
இலங்கையில் கொவிட்-19 ஐ சமாளிப்பதில் கொரிய சுகாதாரத் துறையின் ஆதரவு குறித்து சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி மற்றும் இலங்கைக்கான கொரிய குடியரசின் தூதுவர் வூன்ஜின் ஜியோங் ஆகியோருக்கு இடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலின் போது, கொவிட் -19 தொற்றுநோயைக் கையாள்வதில் தென் கொரிய அரசு பயன்படுத்திய வழிமுறைகள் மற்றும் இலங்கையிலும் கொவிட் -19 பரவுவதைக் குறைப்பதில் தென்கொரியாவின் அணுகுமுறையை எவ்வாறு கையாளலாம் என்பது குறித்து தூதர் சுகாதார அமைச்சருக்கு விளக்கி கூறினார்.
மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பு குறித்து கொரிய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய ஆதரவுக்கு பாராட்டுகளை தெரிவித்த அமைச்சர்,இது தொடர்பாக ஜனாதிபதி மற்றும் இலங்கை அரசு சார்பாக நன்றியையும் தூதுவருக்கு தெரிவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை