முல்லைத்தீவுக்கு வாள்கள் பொல்லுகளுடன் சென்ற மூவர் கைது!


முல்லைத்தீவு உண்ணாப்புலவு பகுதியில் வாள்கள் பொல்லுகளுடன் தாக்குதல் நடத்த வந்த மூவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், குறித்த நபர்கள் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உண்ணாப்புலவு பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் மீது வாள்கள் பொல்லுகளுடன் தாக்குதல் நடத்த வசென்றுள்ளனர்.

அவர்கள் அங்கு வீட்டு உரிமையாளர் மீது தூள் வீசிவிட்டு தாக்குதல் நடத்த முற்பட்ட வேளை வீதியால் சென்ற இளைஞர் ஒருவர் சம்பவத்தை அவதானித்து ஊர்மக்களை அழைத்துள்ளார்.

இதனையடுத்து இருவர் தப்பிச் செல்ல முற்பட்ட வேளை மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை இவர்களை ஏற்றி வந்த முச்சக்கர வண்டி சாரதியையும் கைது செய்த முல்லைத்தீவு பொலிஸார் மூவரிடமும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.