இந்தியாவின் கொரோனா நிலவரம்!


இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 81 ஆயிரத்து 441 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 23 இலட்சத்து 2ஆயிரத்த 110 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் 468 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 63 ஆயிரத்து 428 ஆக அதிகரித்துள்ளது.

ஒரு கோடியே 15 இலட்சத்து 22 ஆயிரத்து 884 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 6 இலட்சத்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.