நீர் நீரன்றோ.. கவிதை!

 


உருகியோடும் உனதன்பின் நதிநீரை 

என் இருகைகளாலும் 

அள்ளி முகர்கிறேன் 

நீயோ என் விரல் இடுக்கில் நுழைந்து விருட்டென இறங்கி  

நழுவிவிடுகிறாய்..

உனதன்பை 

முழுவதுமாக அனுபவித்துவிட உன்னையள்ளி

 இறுகத் தழுவுகிறேன்..

நீயோ என்னை 

முற்றாக நனைத்துவிட்டு 

சட்டென்றாவியாகி

 மறைந்துகொள்கிறாய்..

மிடறுமிடறாக

பருகி அனுபவித்துவிட 

பாடுபடுகிறேன்

 நீயோ

பகுதிநேரத் தாகத்தைத் தீர்த்துவிட்டு பாய்ந்துசெல்கிறாய்

மறுபடியும் உன்னை

 முழுவதுமாய் எனதாக்க 

முயற்சிக்கையில் 

மறைமுகமாய் 

மழையாக பொழிந்து 

'ஒருவருக்கு உரித்தல்ல எனதன்பு.. 

இந்த உலகுக்கே சொந்தமென்று' 

உரத்துச் சொல்கிறாய்

நதியாக 

மழையாக 

நாலுபக்க கடலாக

உடல்சிந்தும் வியர்வையாக 

உலகெல்லாம் நிறைந்தவரே

உண்மையில் நீர் 

நீரன்றோ..!


தம்பலகமம் கவிதா.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.