இந்தியாவிற்கு உதவுகிறது அமெரிக்கா!!

 


இந்தியாவிற்கு 370 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ பொருட்களை அமெரிக்கா வழங்கியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், சுமார் 47 நாடுகள் மருத்துவ உதவி பொருட்களை வழங்கியுள்ளன.

அமெரிக்க இந்திய கூட்டுறவு கூட்டமைப்பை சேர்ந்த முகேஷ் அகி இது குறித்து கருத்துரைக்கையில், ‘ அமெரிக்க அரசு, மக்கள் நிறுவனங்கள் ஆகியவை தாராளமாக மருத்துவ பொருட்கள் உள்ளிட்ட உதவிகளை இந்தியாவிற்கு வழங்கி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

கடந்த ஆண்டு அமெரிக்க மக்கள் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டபோது இந்தியா ஏராளமான மருந்துகள், மருத்துவ பொருட்களை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்த அவர்,  அதற்கு நன்றிக்கடனாக இந்தியாவுக்கு அமெரிக்கா உதவும் என ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கடந்த இரு வாரங்களில் 3 ஆயிரத்து 750 கோடி ரூபாய் மதிப்பிற்கு அமெரிக்கா உதவிக்கரம் நீட்டியுள்ளதாகவும்,  இனி வரும் நாட்களில் இந்த உதவி 7 ஆயிரம் கோடி ரூபாயாக உயரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.