இஸ்ரேல்-பாலஸ்தீனத்துக்கு இடையே சர்வதேசத்தின் கடும் அழுத்தத்தால் முடிவுக்கு வந்துள்ளது!

 


இஸ்ரேல்-பாலஸ்தீனத்துக்கு இடையே கடந்த 11 நாட்களாக நீடித்து வந்த மோதல் சர்வதேசத்தின் கடும் அழுத்தத்தால் முடிவுக்கு வந்துள்ளது.

இன்று வௌ்ளிக்கிழமை அதிகாலை 2 மணி முதல் இரு தரப்புக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்துள்ளது.
மோதல் முடிவுக்கு வந்துள்ள நிலையில் காசாவில் வீதிகளில் கூடிய பாலஸ்தீனர்கள் இறைவன் சிறப்பானவர், இறைவனுக்கு நன்றி என கோஷங்களை எழுப்பி பட்டாசு முழங்கி மகிழ்ச்சி ஆரவாரம் செய்து வருகின்றனர்
11 நாட்கள் நீடித்த மோதலால் 240 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் பாலஸ்தீனம்-காசாவை சேர்ந்தவர்களாவர்.
இந்த மோதலில் தங்களுக்கே வெற்றி என இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் போராளிகள் இரு தரப்புமே உரிமை கோரியுள்ளன.
இதேவேளை இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் அடுத்த கட்டத்துக்கு செல்வதற்கான ஓர் உண்மையான வாய்ப்பை வழங்குகிறது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.