‘கருப்பு பூஞ்சை’ தொற்று இலங்கையில் இல்லை

 


இந்தியாவின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள ‘கருப்பு பூஞ்சை’ தொற்றுடைய ஒருவர் அம்பாறை மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானதென சுகாதார தரப்பு நேற்று உறுதிப்படுத்தியது.

அம்பாறை வைத்தியசாலையின் நுண்ணுயிரியல் தொடர்பான விசேட வைத்தியர் உபுல் பிரியதர்ஷன இதனை தெரிவித்தார்.

அத்துடன் கறுப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நபர் அத்தகைய நோயால் பாதிக்கப்பட்டவர் இல்லை என்பது மேலதிக ஆய்வுகளில் உறுதிபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் கொரோனா மற்றும் நீரிழிவு நோயாளர்கள் கறுப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்படலாம் என நுண்ணுயிரியல் தொடர்பான நிபுணர் பேராசிரியர் ஜெனிபர் பெரேரா தெரிவித்தார்.

இதேவேளை, இந்தியாவில் இதுவரையில் 8,800 பேர் கறுப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னர் இந்தியாவில் சிலருக்கு கறுப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டிருந்தது.

எனினும் தற்போது அந்த எண்ணிக்கை வெகுவாக அதிகரிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.