31 மாணவர்களுக்கு வவுனியா வளாகத்தில் கொரோனா தொற்று!!

 


யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் 31 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டள்ளது.


இந்த தகவலை வவுனியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகம் வெளியிட்டுள்ளது.


அதன்படி விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கே தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கின்றது. ஏற்கனவே இரண்டு மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து மாணவர்களிடையே துரித என்டிஜன் பரிசோதனை நேற்று மேற்கொள்ளப்பட்டது.


இந்த பரிசோதனையில் மொத்தம் 61 மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்ட நிலையில் அவர்களில் 31 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.