விடுதலை வேட்கையுடன் தொடரும் சுவிஸ் நாடு தழுவிய மனிதநேய ஈருருளிப் பயணம் 4ம் நாள்!

 தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டும்  எமது விடுதலைப்போரின் நியாயத்தன்மையை உணர்த்தவும் பயணிக்கும் ஈருருளிப்பயணமானது இன்றும் இரு குழுக்களாக ஆரம்பமானது.

லவுசான் மாநகரசபையில் மகஜர் கையளிக்கப்பட்டதனைத் தொடர்ந்து கடும் சிரமத்திற்கும்  கன மழைக்கும் மத்தியிலும் லவுசான் நகரிலிருந்து நொசத்தல் மாநிலத்தில் இன உணர்வாளர்களின் உற்சாக வரவேற்பினைத் தொடர்ந்து  அம்மாநில மாநகர முதல்வரிடம் மகஜர் கையளிக்கப்பட்டு அவர்களினால் மனிதநேயச் செயற்பாட்டாளர்களுக்கு விருந்துபசாரம் அளிக்கப்பட்டு கலந்துரையாடலும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியாக தமிழின அழிப்பு நினைவு நாளான 18.05.2021 அன்று பேர்ண் மாநிலத்தில் தமிழின அழிப்பு நினைவு கூரப்படும் இடமான Helvetiaplatz திடலைச் சென்றடையவுள்ளது.

லுட்சேர்ன் மாநிலத்தில் ஆரம்பமாகிய ஈருருளிப் பயணமானது இன்று மாலையளவில் சொலத்தூர்ண் மாநிலைச் சென்றடைந்ததுடன்  அம் மாநில மாநகரசபை உத்தியோகத்தர்களிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது.

தொடர்ச்சியாக நாளை (18.05.2021) பேர்ண் மாநிலத்தில் தமிழின அழிப்பு நினைவு கூரப்படும் இடமான Helvetiaplatz  திடலைச் சென்றடையவுள்ளது.

அதேபோன்று சூரிச் மாநிலத்திலும் அம்மாநில மாநகரசபை உத்தியோகத்தர்களிடம் தமிழின அழிப்பின் பதிவுகள் அடங்கிய மகஜர் கையளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தமிழின உணர்வாளர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு நிகழ்வுகளின் நோக்கமானது மாநில ரீதியிலாக வேற்றின மக்களைச் சென்றடைவதோடு  சுவிஸ் ஊடகத்திலும் தமிழின அழிப்பு சார்ந்த விடயங்கள் வெளிவந்துள்ளமையானதும் சிறப்பான அம்சமாகும்.

‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’

#

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.