5000 இற்கு மேற்பட்ட அழைப்புக்கள் தினமும் !!

 


நாளொன்றிற்கு 1990 அம்பியூலன்ஸ் சேவைக்கு 5300 ற்கும் அதிக தொலைபேசி அழைப்புக்கள் கிடைப்பதாக ஆரம்ப சுகாதார, தொற்று நோய் மற்றும் கொவிட் தடுப்பு இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.


இந்த அழைப்புக்களின் ஊடாக நாளொன்றில் ஆயிரக்கணக்கானோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதாகவும் அமைச்சு குறிப்பிடுகின்றது.


நாடு பூராகவும் 297, சுவசரி அம்பியூலன்ஸ் வண்டிகள் காணப்படுவதுடன், 1394 ஊழியர்கள் அவற்றில் கடமையாற்றி வருவதாகவும் அந்த அமைச்சு மேலும் கூறியுள்ளது.


எனினும், 112 அம்பியூலன்ஸ் வண்டிகளுக்கான தேவை காணப்படுவதாக ஆரம்ப சுகாதார, தொற்று நோய் மற்றும் கொவிட் தடுப்பு இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.




Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.