8 சிறைக் கைதிகள் உட்பட 46 பேருக்கு மட்டக்களப்பில் ஒரே நாளில் தொற்று!
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் சிறைக் கைதிகள் 8 பேர் உட்பட 46 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 1,833 ஆக அதிகரித்துள்ளதாக இன்று ஞாயிற்றுக்கிழமை (23) மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேரும், களுவாஞ்சிக்குடி மற்றும் ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் தலா ஒருவர் வீதம் 2 பேரும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேரும்,
ஓட்டுமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேரும். வவுணதீவு மற்றும் கிரான் சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் தலா 2 பேர் வீதம் 4 பேரும், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேரும், ஏறாவூர் மற்றும் பட்டிருப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் தலா 3 பேர் வீதம் 6 பேர் உட்பட 46 பேருக்கு பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்படடுள்ளது.
இதேவேளை, இதுவரை 32,380 பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், 22 மரணங்கள் இடம்பெற்றுள்ளது. எனவே பொது மக்கள்; வீட்டை விட்டு முடிந்தளவு வீதிக்கு வருவதை தவிர்துக்கொள்ளுமாறு என அவர் தெரிவித்தார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை