வெடிபொருளுடன் வடமராட்சி கிழக்கில் ஒருவர் கைது!


வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் வெடிபொருட்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் மீன்வாடியில் கிளைமோர் மற்றும் துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தெரியவந்துள்ளது.
குறித்த நபர் முன்னாள் போராளி எனவும் கடந்த ஜனவரி மாதம் இராணுவத்தினருடன் முரண்பாடு ஏற்படுத்தியவர் எனவும் தெரியவந்துள்ளது.  

குறித்த நபரிடம் வெடி பொருட்கள் வைத்திருப்பதாக இரகசிய பொலீஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்தே தேடுதலில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.