மட்டக்களப்பில் இன்று 13 பேருக்கு தொற்று!


மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 13 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் மயூரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கூழாவடி பகுதியில் இன்று அன்டிஜன் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. நேற்றையதினம் திசவீரசிங்கம் சதுக்கம் பகுதியில் 11கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து இன்று காலை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் ஏனைய பகுதிகளில் சந்தேக நபர்களாக இனங்காணப்பட்டவர்கள் அன்டிஜன் சோதனைகளுக்குட்படுத்தப்பட்டனர்.

இதன்போது கூழாவடி பகுதியில் 120பேருக்கு அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவர்களில் ஐந்து பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் கே.கிரிசுதன் தெரிவித்தார்.

இதேநேரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 13பேர் கோவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.

அவர்களில் இருவர் வெளியிடங்களை சேர்ந்தவர்கள் எனவும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன் தெரிவித்தார்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாம் கட்ட கோவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 1350பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.