தமிழின அழிப்பின் சாட்சியம் – முள்ளிவாய்க்கால் கஞ்சி !

 


தமிழின அழிப்பு வாரத்தை முன்னிட்டு , தமிழ் இளையோர்களால் பேர்லின் நகரத்தில் உதவிகள் அற்று வீதியோரத்தில் வாழும் பல்லின சமூகத்தினருக்கு நேற்றைய தினம் மாலை நேரம் கஞ்சி மாதிரியான Reissuppe வழங்கப்பட்டது.

2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்காலில் ஒரு நேர உணவுக்கு கஞ்சிக்காக காத்திருந்த நேரத்தில் ஈவிரக்கம் அல்லாமல் , குழத்தைகளையும் , சிறுவர்களையும் கொத்துக் குண்டுகளால் கொன்றது சிங்களம்.

அந்த வலி நிறைந்த நாட்களை மீட்கும் வகையில் நேற்றைய தினம் மேற்கொண்ட மனிதநேய நற்பணி சிறப்பாக அமைந்தது.உணவை பெற்றுக் கொண்டவர்களில் ஒருவர் குழந்தைகளின் படங்களை பார்வையிட்டு கண்ணீர் மல்க அழுதது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.