பெற்ற தாய் தந்தையருக்கு பிள்ளைகள் செய்த கொடுமை!

 


கொழும்பு – வெல்லம்பிட்டி பகுதியில் வயோதிபத் தாய் தந்தை இருவரையும் வீதியில் விட்டுச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மேலும் தமது தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத வயோதிபத் தாய் மற்றும் தந்தை வெல்லம்பிட்டி பகுதியிலுள்ள கடை ஒன்றுக்கு முன்னால் கைவிடப்பட்ட நிலையில் உள்ளனர்.

அத்தோடு சுமார் 3 நாட்களுக்கு முன்னர் இவர்களை அவர்களது பிள்ளைகள் கொண்டுவந்து விட்டுச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் தமது பிள்ளைகளின் அடையாளத்தைக் கூற அவர்கள் விரும்பவில்லை. ஆனால் அவர் ஹொரனையில் வசிப்பதாக தெரிவிக்கின்றனர்,

அத்தோடு குறித்த தம்பதியினர் உதவியற்ற நிலையில் படுத்துக் கொண்டு உள்ளூர்வாசிகள் கொடுத்த உணவை சாப்பிட்டு வருகின்றனர்.

மேலும் இந்த கொரோனா தொற்று காலக்கட்டத்திலும் தமது பெற்றோரை கவனிக்காமல் இவ்வாறு வீதியில் விட்டுச் சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.