தமிழகத்தில் தொடர்ந்து கெத்துக் காட்டும் எடப்பாடியார்!


தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலை வகித்து வருகிறார். அவர் தற்போதைய நிலவரரப்படி 32 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் உள்ளார்.

தமிழக சட்டசபைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தில் போட்டியிட்ட 27 அமைச்சர்களில் 11 பேர் பின்னடைவை சந்தித்து வருவதாக செய்திகள் கூறுகின்றன.

போடியில் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வத்திற்கு அவரை எதிர்த்து போட்டியிடும் திமுகவின் தங்கதமிழ்ச் செல்வனுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அதுவும் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அவர் முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி இதுவரை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் 30,169 வாக்குகளை பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவின் சம்பத் குமார் 10,266 வாக்குகளை பெற்றுள்ளார். இருவருக்கு தொடர்ந்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் எடப்பாடி உள்ளார்.

எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, செய்தியாளர்கள் கேள்விகளுக்கு கோபப்படாமல் பதில் அளிப்பார். 5 ஆண்டுகளைக் காட்டிலும் கடந்த 1 மாதமாக இவர் ஆற்றிய தேர்தல் களப்பணியும் இவருக்கு இத்தனை வாக்குகள் கிடைக்க காரணமாகும்.

மேலும் அதிமுக நிர்வாகிகளை அரவணைத்து செல்வதிலும் இவருக்கு நிகர் இவரே. இவருக்கு கொடுத்த ஏகோபித்த ஆதரவை பார்த்தால் மக்கள் செல்வாக்கு இவருக்கு இன்னும் உள்ளதாகவே தெரிகிறது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.