திருகோணமலை மாவட்டத்தில் மேலும் ஒரு பகுதி முடக்கப்பட்டது!


திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆண்டான்குளம் சுபதலங்கர மாவத்த கிராமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த பகுதியில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வீதிகளை மறித்து பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் ஏற்கனவே பல கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், மக்கள் அவதானமாகவும் சுகாதார விதிமறைகளைப் பின்பற்றியும் தமது நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதாரத் தரப்பினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.