மன்னார் மாவட்ட தாதியர்கள் போராட்டம்!!

 


நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்கள் மன்னார் பொது வைத்தியசாலை வளாகத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை 11 தொடக்கம் 12 மணிவரை அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.


குறிப்பாக தாதியர்களுக்கு என அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள விசேட விடுமுறை தமக்கு வழங்கப்படுவது இல்லை எனவும், கர்ப்பிணித் தாதியர்களுக்கு விடுமுறை வழங்காமல் தொடர்சியாக பணியில் ஈடுபடுத்துவதாகவும் போரட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.


மேலும் ஆண்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளும் தாதியர்கள் ஒழுங்கான முறையில் கிருமி தொற்று நீக்கவோ ஓய்வு எடுக்கவோ முறையான வசதி ஏற்படுத்தி தரவில்லை எனவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.


அதேநேரம் வேறு மாவட்டங்களுக்கு பணியின் நிமித்தம் செல்லும் அம்புலன்ஸ் சாரதிகளுக்கோ மேலதிக கடமை மேற்கொள்ளும் தாதியர்களுக்கோ தங்குவதற்கு ஓய்வு விடுதியோ அல்லது சாதாரண அறையோ ஒழுங்கு செய்து தரப்படவில்லை எனவும் கவலை வெளியிட்டனர்.


குறித்த பிரச்சினைகளை மன்னார் பொது வைத்தியசாலை பணிப்பாளரிடம் பல்வேறுமுறை சுட்டிக்காட்டியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் இவ்வாரத்துக்குள் தீர்வு பெற்று தராவிட்டால் இலங்கை முழுவதும் போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.