நங்கூரமிடப்பட்டிருந்த எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் வெடிப்பு!!

 


கொழும்புத் துறைமுகத்திற்கு அருகில், நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலொன்றில் ஏற்பட்டுள்ள தீப்பரவல் காரணமாக இருவர் காயமடைந்துள்ளனர்.


காயமடைந்துள்ள குறித்த இருவரும் சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


எம்.வி. எக்ஸ்-பிரஸ் பேர்ல் என்ற கப்பலில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தீப்பரவல் ஏற்பட்டிருந்த நிலையில், கடற்படையினர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தனர்.


இந்தநிலையில் இன்றைய தினம்(செவ்வாய்கிழமை) காலை முதல் மீண்டும் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாகவும், இதன்போது இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்திலேயே இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அத்துடன், கப்பலில் இருந்த 25 பணியாளர்களை இலங்கை கடற்படை பாதுகாப்பாக மீட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.


இதேவேளை, கப்பலில் இருந்த கொள்கலன்களில் எட்டு கொள்கலன்கள் கடலில் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.