காலநிலைச் சீரின்மையால் பலத்த சேதங்களை எதிர்நோக்கும் மக்கள்!!
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 10 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய கொழும்பு, களுத்துறை, கம்பஹா, இரத்தினபுரி, கேகாலை, புத்தளம், கண்டி குருணாகல், காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
சீரற்ற காலநிலை காரணமாக கடந்த 13ஆம் திகதி முதல் இதுவரை 12 ஆயிரத்து 177 குடும்பங்களைச் சேர்ந்த 48 ஆயிரத்து 300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்த நிலையம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், சீரற்ற காலநிலை காரணமாக 4 மரணங்கள் பதிவாகியுள்ளன என்றும் ஆயிரத்து 37 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை