லண்டனிலிருந்து ஒக்சிஜன் சிலிண்டர்கள் தமிழகம் வந்தன!!
கொரோனா வைரசின் இரண்டாம் அலை இந்தியாவில் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் இறப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான படுக்கைகள் மற்றும் ஒக்சிஜன் விநியோகத்தின் மீது மிகக் கடுமையான அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது.
இதனைத்தொடர்ந்து இந்தியாவில் ஏற்பட்டுள்ள இரண்டாவது அலை கொரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில் உதவிட பல்வேறு நாடுகள் முன் வந்துள்ளன. அந்த வகையில், லண்டனில் இருந்து இந்திய விமானப்படை சிறப்பு விமானம் மூலம் 46.6 லீற்றர் திறன் கொண்ட 450 ஒக்சிஜன் சிலிண்டர்கள் இன்று அதிகாலை தமிழகம் சென்றடைந்தன.
முன்னதாக குவைத்திலிருந்து 282 சிலிண்டர்கள், 60 ஒக்ஸிஜன் செறிவூட்டிகள், வென்டிலேட்டர்கள் மற்றும் பிற மருத்துவப் பொருட்களைக் கொண்டு வந்த விமானம் ஒன்றும் இன்று காலை இந்தியா வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை