யாழின் ஒரு பகுதியை முடக்க திட்டம்!!
யாழ்.காரைநகரின் ஒரு பகுதியில் அதிகளவான கொரொனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த பகுதியினை முடக்க தேசிய கொவிட் தடுப்பு செயலணியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட செயலர் க.மகேஸன் கூறுகையில், காரைநகர் ஜே-47 கிராமசேவகர் பிரிவில் ஒரு பகுதியில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.
இதனபடிப்படையில் அந்த பகுதியை முடக்குவதற்கான கோரிக்கை மாவட்டச் செயலகம் ஊடாக தேசிய கொவிட் தடுப்பு செயலணிக்கு அனுப்பபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அப்பகுதீல் தற்சமயம் 60 குடும்பங்கள் அப்பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு தேவையான நிவாரணத்தை வழங்க தயாராகி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை