காப்புறுதி நிறுவனம் மீது அதிரடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!!

 


செங்கலடி பிரதான வீதியில் உள்ள தனியார் நிறுவன கட்டிட தொகுதியில் நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்வை சுகாதாரத்துறையினர் சுற்றிவளைத்ததுடன் நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.


இன்று காலை செங்கலடி பகுதியில் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, செங்கலடி பொது சுகாதாரப் பரிசோதகர், ஏறாவூர் பொலிஸாருடன் இணைந்து குறித்த சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தார்.


இதன்போது, நிகழ்வில் கலந்து கொண்ட 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டதுடன், குறித்த தனியார் நிறுவன முகாமையாளர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.    


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.