கிழக்கு பல்கலைக்கழக மாணவி துன்புறுத்தல் - மாணவன் கைது!!

 


கிழக்கு பல்கலைக்கழக விடுதிக்கு அருகில் வைத்து பல்கலைக்கழக மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 25 வயதுடைய மாணவனை ஏறாவூர் பொலிசார் நேற்று சனிக்கிழமை நள்ளிரவு கைது செய்துள்ளனர்.


குறித்த பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவரும் மாணவியை சம்பவதினமான நேற்று நள்ளிரவு 12 மணியளவில் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.


இதனையடுத்து உடனடியாக மாணவனை கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட மாணவியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட மாணவன் விடுதியில் தங்கிருந்து கல்வி கற்றுவரும் 25 வயதுடையவர் எனவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசர் தெரிவித்துள்ளனர்.


இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.