தன்னந் தனியே- இலக்கிளி பவானி!!

 


தன்னந் தனியே கனவு சுமந்து

தளர்ந்து நாளும் நடக்கின்றேன்

தவணை முறையில் கணைகள் பட்டு 

தடுக்கி வீழ்ந்தே  துடிக்கிறேன்

வண்ண வண்ண ஆசை சுமந்து

எண்ணி எண்ணிப் பறக்கிறேன்

ஊனப் பறவை பாடும் கானம்

காற்றில் கரைந்து போகுதே

உணர்வுகளற்ற உறவுகள் உலகம்

உருக் குலைந்து சாகிறேன்

பாசக்கடலில் வீழ்ந்து நானும்

பரிதவித்து போகிறேன்

பணமற்ற மனங்கள் எலாம்

மண்ணில் ஓர் பிணமென்று

மாசற்ற சோதியும் 

மனம் மலர மறுக்கிறான்

வாழ்க்கைப் பாடம் படிக்க எண்ணி

வாழ்ந்து நானும் பார்க்கிறேன்

வாழப்பிடிக்கவில்லை என்று 

வாழ்வை நானும் வெறுக்கிறேன்

நேர்மையற்ற உள்ளங்களை

நேர்மையாக்கத் துடிக்கிறேன்

பேச மனம் பிடிக்காது

எழுத்தினிலே வடிக்கின்றேன்



இலக்கிலி பவானி


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.