வாராதோ விடிவொன்று - கவிதை!!
கரையாத காலக்கனதிகள்
நிரையாக மனஏட்டில்....
கருக்கொண்ட பாடல் ஒன்று
உருவிழந்த சோகம் அது....
பால்மணங்கள்
இரத்த வாடைகளாய்....
பரிதவிப்பும் காத்திருப்பும்
மறையாமலே.....
காயல் நிலத்தில்
கருவறுக்கப்பட்டோம்.
நரிவாயில் புதைந்த
குருவிகளாய்....
தாயற்ற குழந்தையாய்...
தவிக்கிறது எம்மினம்
தேற்றரவாளனை
தேடுது எம் மனம்...
கிழிந்த சேலைக்குள்
தொலைந்தது எம் கனவுகள்.
ஓயாத அழுகைக்கு
வாராதோ விடிவொன்று...
தமிழரசி
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை