பெண்கள் கொரோனா சிகிச்சை நிலையம் மன்னாரில் திறப்பு!!

 


மன்னாரில் பெண்களுக்கான கொரோனா சிகிச்சை நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.


மன்னார் தாராபுரம் துருக்கிச் சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா இடை நிலை சிகிச்சை நிலையத்துக்கு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான குழுவினர் நேற்று விசேட கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.


மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல், மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன், மன்னார் பிரதேசச் செயலாளர் எஸ்.பிரதீப், மன்னார் மாவட்ட தொற்று நோய் விஞ்ஞான பிரிவுக்கான வைத்திய அதிகாரி வைத்தியர் கதிர்காமநாதன், மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரி கே. திலிபன் உட்பட வைத்தியர்கள் ஆகியோர் சென்றிருந்தனர்.


இதன் போது குறித்த கொரோனா இடை நிலை சிகிச்சை நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள செயற்பாடுகளையும் பார்வையிட்டனர். தற்போது வட மாகாணத்தில் ஏற்பட்டுள்ள நிலைமையினால் கூடுதலான பெண்கள் தொற்றுக்கு உள்ளாவதை கருத்தில் கொண்டு பெண்களுக்கான சிகிச்சை நிலையமாக இயங்க குறித்த கொரோனா இடைநிலை சிகிச்சை நிலையம் இயங்க உள்ளது.


அதன்படி அங்கு ஒரே நேரத்தில் நூறு நபர்கள் தங்கி இருந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


மேலும் இன்று முதல் மன்னார் தாராபுரம் துருக்கிச் சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா இடை நிலை சிகிச்சை நிலையத்தில் பெண் தொற்றாளர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.